Author: Prime Reporter

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்குகிறது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது அதன்படி வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா வேட்பு மனு தாக்கல் செய்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதவிருக்கும் பயணத்தில், கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலில், கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களின் பக்கபலத்தில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்களின் ஆர்பரிக்கும் ஆதரவுக்கு மத்தியில் – தமிழக வெற்றிக் கழகத்தின் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தேன். என்னை குடும்பத்தில் ஒருவராகப் பார்த்து தங்கள் பேரன்பையும் பேராதரவையும் வழங்கிவரும் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மக்களின் நம்பிக்கையை என்றும் காப்பேன். அவர்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபடுவேன். வில்லிவாக்கம் மக்களின் நல்வாழ்விற்கு எப்போதும்…

Read More

நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் 31 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி, உலகளவில் ரூ. 85 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Read More

கோவை வாளையார் அருகே கட்டுப்பாட்டை இழந்த இன்னோவா கார் மோதி கேரளாவைச் சேர்ந்த இரண்டு புகைப்படக் கலைஞர்கள் உயிரிழந்தனர்; மூவர் படுகாயமடைந்தனர்.

Read More

திமுக தேர்தல் அறிக்கையில், மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் சதுரங்க வேட்டை வாக்குறுதிகள் தான் இடம் பெற்றுள்ளன என அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான எந்தத் திட்டமும் இல்லை. மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்யும் சதுரங்க வேட்டை வாக்குறுதிகள் தான் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் திமுக தேர்தல் அறிக்கை என்பது இந்தத் தேர்தலின் கதாநாயகனும் அல்ல… கதாநாயகியும் அல்ல. மாறாக வில்லனாகவும், காமெடியனாகவும் தான் உள்ளது. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 505 வாக்குறுதிகளை அளித்த திமுக, அவற்றில் வெறும் 66-&-ஐ மட்டும் தான் நிறைவேற்றியது, 439 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தியிருந்தேன். இப்போது திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 517 வாக்குறுதிகளில் 63 வாக்குறுதிகள் முந்தைய தேர்தல் அறிக்கையில்…

Read More

ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஜனநாயகம் செத்துவிடும் என்பதை வலியுறுத்தி, சுடுகாட்டிலிருந்து இறுதிச்சடங்கு பானையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நூர் முகமது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

Read More

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More

சென்னையில் நடந்த கல்லூரி விழாவில் மேடையில் தொடர்ந்து நடனமாடிய நடிகை சான்வே மேக்னாவை ‘ஆர்வக்கோளாறு’ என பிரபுதேவா கலாய்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

The Legend திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அருள் சரவணன், தனது முதல் படத்திலேயே பான் இந்தியா முயற்சியுடன் களமிறங்கினார். ஆனால், அந்தப் படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதையடுத்து, தனது இரண்டாவது படத்தில் முழுமையான மாற்றத்துடன் திரும்ப வேண்டும் என்ற நோக்கில், கதை மற்றும் இயக்கத்தில் சிறந்த வரலாறு கொண்ட இயக்குநரை தேர்வு செய்ய முடிவு செய்தார். அதன் விளைவாக, துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘லீடர்’ திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகினார். முன்னதாக எதிர்நீச்சல், கொடி, கருடன் போன்ற வெற்றிப்படங்களை வழங்கியுள்ள துரை செந்தில் குமார், இந்த படத்தின் மூலம் அருள் சரவணனை புதிய கோணத்தில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘லீடர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஷியாம், லால், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பயல் ராஜ்புத், அமிர்தா ஐயர், வி.டி.வி கணேஷ், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட…

Read More

ஜென் சி தலைமுறையின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ள பெயர் கென் கருணாஸ். இளம் ரசிகர்களின் ரசனையை துல்லியமாக புரிந்து கொண்டு, அதற்கேற்ற கதை மற்றும் நடையில் உருவாக்கிய அவரது ‘யூத்’ திரைப்படம் தற்போது தமிழகமெங்கும் வசூல் வெட்கத்தை கிளப்பி வருகிறது. நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் போர்டுகள் காட்சியளிப்பது, இப்படத்தின் பிரபலத்தைக் காட்டுகிறது. இந்த நிலையில், இந்திய சினிமா வட்டாரமே பெரிதும் எதிர்பார்த்திருந்த ‘துரந்தர் 2’ படத்துடன் ஒப்பிடும்போது ‘யூத்’ படம் தமிழகத்தில் ஆச்சரியப்பட வைக்கும் சாதனையை பதிவு செய்துள்ளது. ‘துரந்தர் 2’ திரைப்படம் தமிழகத்தில் சுமார் ரூ.27 கோடி வசூலை மட்டுமே எட்டியுள்ள நிலையில், கென் கருணாஸ் இயக்கிய ‘யூத்’ படம் ரூ.37 கோடியை கடந்துவிட்டு முன்னிலை பிடித்துள்ளது. இந்த எதிர்பாராத வெற்றி, இளம் இயக்குநராக கென் கருணாஸின் மார்க்கெட்டையும் உயர்த்தியுள்ளது. தற்போது கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து, வரும் நாட்களில் இப்படம் ரூ.50 கோடியை தாண்டும் என…

Read More

நடிகர் விஜய் காட்டிய பணிவு மற்றும் மரியாதைக்காக, நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ள சுவாரஸ்யமான தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

Read More