Close Menu
    What's Hot

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»”கோவை சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி: சூரத்தில் 10 சைபர் மோசடி நபர்கள் கைது”
    தமிழ்நாடு

    ”கோவை சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி: சூரத்தில் 10 சைபர் மோசடி நபர்கள் கைது”

    Prime ReporterBy Prime ReporterJanuary 12, 2026Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் போலீசார், குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் பதுங்கியிருந்த 10 சைபர் மோசடி நபர்களை கைது செய்து, ரூ.16.49 லட்சம் மதிப்புள்ள ஆன்லைன் மோசடி வழக்கை முறியடித்துள்ளனர்.

    கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 71 வயதான சாமுவேல் சந்திரபோஸ் என்பவருக்கு, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி RTO CHALLAN அபராதம் செலுத்த வேண்டும் எனக் கூறி ஒரு APK அப்ளிகேஷன் வாட்ஸ்ஆப்பில் வந்துள்ளது. அதை உண்மை என நம்பிய அவர் அந்த ஆப்பை தனது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து அவரது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு செயல்பட முடியாத நிலையில் மாறியுள்ளது. அடுத்த நாளில் தொடர்ந்து OTPகள் வந்த நிலையில், அவரது IndusInd வங்கிக் கணக்கில் வைத்திருந்த Fixed Deposit தொகை எடுத்துக்கொள்ளப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. வங்கியை அணுகி சரிபார்த்தபோது, ரூ.16,49,961 ஆன்லைன் மூலம் மோசடியாக எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, 12.09.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், இந்த பணம் 12 தவணைகளாக பல கிரெடிட் கார்டுகளுக்கு மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

    கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் என். கண்ணன் மற்றும் துணை ஆணையர் எம்.பி. திவ்யா ஆகியோரின் உத்தரவின்பேரில், சைபர் கிரைம் ஆய்வாளர் அழகராஜ் தலைமையிலான தனிப்படை சூரத்திற்கு விரைந்தது. அங்கு மேற்கொண்ட சோதனையில் 10 சைபர் மோசடி நபர்களை கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.3.50 லட்சம் பணம், 311 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், 10 மொபைல் போன்கள், ஒரு ஸ்வைப்பிங் மெஷின் மற்றும் ஒரு காசோலை புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், எதிரிகளின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.6.39 லட்சம் முடக்கப்பட்டு, நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்ட நபருக்கு திருப்பி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த வெற்றிகரமான நடவடிக்கையை மேற்கொண்ட கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களை காவல் ஆணையர் கண்ணன் பாராட்டினார்.

    Coimbatore Cyber Crime Police Coimbatore Police Action Crime Updates Coimbatore Cyber Crime Awareness Cyber Fraud Arrest Fraudsters Caught Online Scam News Surat Arrest Tamil Nadu Police கோவை சைபர் கிரைம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!

    August 5, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Don't Miss

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    கோவையில் தெருநாய்களிடம் இருந்து தப்பியோடி மின்மாற்றியில் ஏறிய தேசியப் பறவையான மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.