தமிழக சட்டசபையில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் கோவையில் நடைபெற்ற மாணவர் கொலை வழக்கு தொடர்பாக காரசார விவாதம் நடைப்பெற்றது. 4 நாட்கள் விடுமுறைக்குப்பின் மீண்டும் தொடங்கிய தமிழக சட்டசபையில், கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.
கோவை மாணவர் கொலை என்பது போதைப்பொருள் கும்பல் குறித்த தகவல் தெரிவித்ததால் நடந்த கொலை என்றும், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிற கட்சி எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர்.
இந்த மாணவர் கொலைக்கும் போதைப்பொருள் புகாருக்கும் தொடர்பில்லை என்றும், இது மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் என்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். இச்சம்பவத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்வர் விஜய்யின் உத்தரவின்படி உரிய விசாரணை நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!
போதைப்பொருள் விவகாரத்தில் திமுக மற்றும் தவெக (தற்போதைய ஆளும் கட்சி) அமைச்சர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜாபர் சாதிக் விவகாரம் மற்றும் முந்தைய ஆட்சியில் ஸ்டேடியத்தில் நடந்த சம்பவம் குறித்து இருதரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டனர்.

