நடிகர் விக்ரம் அரிய வகை ‘லார் கிப்பன்’ (Lar Gibbon) குரங்குடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோவால் ஏற்பட்ட சர்ச்சை மற்றும் பத்திரிகையாளர் செய்யாறு பாலுவின் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் விக்ரம் சில நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அரிய வகை ‘லார் கிப்பன்’ குரங்கைத் தன் மடியில் வைத்து கொஞ்சும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, வனவிலங்கு ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சர்வதேச வனவிலங்கு வர்த்தக ஒழுங்குமுறை (CITES) மற்றும் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் இதுபோன்ற விலங்குகளை வீட்டில் வளர்ப்பதும், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வருவதும் சட்டப்படி குற்றமாகும்.
டிராமா பண்ணாதீங்க.. விஜய் – சங்கீதா விவகாரம்.. மௌனம் கலைத்த திரிஷா..!
இந்தச் சர்ச்சையை அடுத்து, தமிழக வனத்துறையினர் இது குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கினர். மேலும், அந்த விலங்கு விக்ரமின் சம்பந்தியும் (மகள் அக்ஷிதாவின் மாமனாரும், கவின் கேர் நிறுவன தலைவருமான சி.கே. ரங்கநாதன்) கேளம்பாக்கம் / ஈசிஆர் ஃபார்ம்ஹவுஸில் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. சர்ச்சையைத் தொடர்ந்து விக்ரம் அந்த வீடியோவை நீக்கினார்.
இது குறித்துப் பேசிய பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, பிரபலங்கள் இதுபோன்ற அரிய வகை வனவிலங்குகளுடன் ரீல்ஸ் செய்து வெளியிடுவது பொதுமக்களிடையே தவறான முன்மாதிரியை உருவாக்கும் என்று விமர்சித்துள்ளார். மேலும், பிரபலங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இது போன்ற விவகாரங்களில் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்கும் நடிகை திரிஷாவைப் பார்த்து விக்ரம் போன்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

