கோவை விமான நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிகளை ஏற்றி செல்லவும், பயணிகளை இறக்கி விடவும் வந்து செல்கின்றது. இதற்காக கோவை விமான நிலைய பகுதிகளில், கார் ஓட்டுநர்களின் ஸ்டாண்டுகளும் உள்ளது. கடந்த சில நாட்களாகவே சொந்த உரிமம் பெற்ற ஓன் போர்டு வாகனங்களை டாக்ஸிகளாக பயண்படுத்தி, பயணிகளை ஏற்றி விமான நிலையத்தில் இறக்கி விடுவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்தது.
இந்த நிலையில், நேற்று டாக்ஸி ஓட்டுநர்கள் கோவை விமான நிலையத்திற்கு வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்த பொழுது, அவர் டாக்ஸி ஓட்டுனர்கள் பயன்படுத்தும் தனியார் நிறுவனமான, ஓலா, உபர், ராபிட்டோ, போன்ற செயலிகளை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாக தனது ஒன் போர்டு கார்களில் வருவாய் ஈட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சாத்தியமே இல்லைனு நினைச்சேன்.. ஆனா சாதிச்சுட்டேன்.. சமந்தாவின் வைரல் பதிவு..!
இதனைத் தொடர்ந்து டாக்ஸி ஓட்டுநர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு, அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதனால் கோவை விமான நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்ஸி ஓட்டுநர்கள் கோவை மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

