நடிகை தர்ஷா குப்தா தனது பெயரில் பிரத்யேக செயலி ஒன்றைத் தொடங்கி, அதில் வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்தது மற்றும் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் முறைகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பாகச் சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் சில இளைஞர்கள் புகாரும் அளித்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷா குப்தா நீண்ட மற்றும் உணர்ச்சிபூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.
“ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகள் பெறவும், என்னுடன் பேசவும்தான் அந்தச் செயலியில் இணைய சம்மதித்தேன்; அதில் வேறு என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது, நான் சொல்வது உண்மை என்பதற்கு முருகப்பெருமானே சாட்சி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!
“என் அம்மா எனக்குக் கற்றுக்கொடுத்த மதிப்புகளுடன் தான் வாழ்ந்து வருகிறேன்; எவ்வளவு பணமோ புகழோ வந்தாலும், என் எல்லைகளை ஒருபோதும் தாண்ட மாட்டேன்” என்றும் தன்னைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

