தமிழ் சினிமாவில் நடக்கும் சர்ச்சைகள் மற்றும் அரசியல் விவாதங்களுக்கு மத்தியில், நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்ட திருக்குறள் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு மற்றும் அதனைத் தொடர்ந்து அரங்கேறிய கைது நடவடிக்கைகள் மற்றும் அரசியல் தலைவர்களின் கண்டனங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், மறைமுகமாகப் பெண்களை அவமதிக்கும் விவகாரங்கள் மற்றும் அரசியல் நாகரிகம் குறித்து இந்த அறநெறிக் குறள் மூலம் அவர் தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளதாகக் கருதப்பட்டு வைரலாகி வருகிறது.
நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தீய சொற்கள் பேசுவது குறித்தும், பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது குறித்தும் எச்சரிக்கும் வகையிலான திருக்குறளைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, பொறுமையின் அவசியத்தையும், மற்றவர்களைப் பற்றித் தரம் தாழ்ந்து பேசுவதால் ஏற்படும் தீமைகளையும் சுட்டிக்கட்டும் குறளை அவர் பதிவிட்டுள்ளார்.
மன்னிப்பு கேட்கும் தைரியம் இருக்கா?.. உதயநிதி ஸ்டாலினுக்கு குஷ்பு கண்டனம்..!
உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு மற்றும் அதனால் ஏற்பட்ட பெரும் அரசியல்-சினிமா சர்ச்சைகள் உச்சத்தில் இருக்கும் இந்தச் சமயத்தில், நிவேதா பெத்துராஜ் இந்தத் திருக்குறளைப் பதிவிட்டிருப்பது சினிமா வட்டாரத்திலும் இணையத்திலும் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. பலரும் இது தற்போதைய சமூக மற்றும் அரசியல் சூழலை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
— Nivetha Pethuraj (@Nivetha_Tweets) August 4, 2026
அறங்கூறும் ஆக்கம் தரும்.
– திருக்குறள் 183

