கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அருகே காரில் இருந்த ஆடிட்டரை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற திருநங்கைகள், அவரை மிரட்டி ஜி-பே வழியாக ரூ.11,700 வலுக்கட்டாயமாகப் பறித்துள்ளனர்.
இதுகுறித்துத் துடியலூர் போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தியபோது, ஆத்திரமடைந்த திருநங்கைகள் போலீஸாரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கற்களை வீசி ரோந்து வாகனக் கண்ணாடியை நொறுக்கினர். இதில் தலைமைக் காவலர் செல்வராஜ் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதான் ஜனநாயகமா?.. சனம் ஷெட்டிக்கு பிரசாந்த் ரங்கசாமி சப்போர்ட்..!
போலீஸாரைப் பணிசெய்ய விடாமல் தடுத்துத் தாக்குதல் நடத்திய மொபீனா, மகதி, இனியா, ஆரஞ்ச் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

