இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘தி ஹண்டெர்’ (The Hundred 2026) கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உரிமையாளரான காவ்யா மாறனின் ‘சன்ரைசர்ஸ் லீட்ஸ்’ அணி பாகிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அபீர் அகமதை (Abrar Ahmed) சுமார் 1.90 லட்சம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.45 கோடி) கொடுத்து வாங்கியது.
ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் வெளிநாட்டு லீக் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்த்து வரும் சூழலில், இந்திய உரிமையாளர் ஒருவர் பாகிஸ்தான் வீரரைத் தன் அணியில் ஒப்பந்தம் செய்தது கிரிக்கெட் வட்டாரங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!
இந்த விவகாரம் குறித்துப் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கக் காவ்யா மாறன் மறுத்துவிட்டார். அரசியல் ரீதியான மற்றும் உணர்வுபூர்வமான தாக்கங்களைத் தவிர்க்கும் வகையில் அவர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்காமல், தனது அணிகளின் ஒட்டுமொத்த கட்டமைப்பு மற்றும் தேர்வுகள் குறித்து மட்டுமே மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்.

