நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘இதயம் முரளி’ (Idhayam Murali) திரைப்படத்தில் தான் நடிக்கும் சிறப்புத் தோற்றம் (Cameo role) குறித்த முதல் தோற்றத்தைப் பகிர்ந்துள்ளார். இப்படத்தில் அவர் ஒரு தமிழ் மணப்பெண் போல பட்டுப்புடவை, பாரம்பரிய நகைகள் மற்றும் மல்லிகைப் பூ சூடி மிக அழகாகக் காட்சியளிக்கிறார்.
நடிகர் ஃபஹத் பாசிலும் அவரும் நீண்ட கால நண்பர்கள். முதன்முறையாக இவர்கள் இருவரும் இணைந்து திரையில் தோன்றும் ஒரு காட்சியைப் படமாக்கியுள்ளனர். இது குறித்து மாளவிகா, “நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க சரியான படத்திற்காகக் காத்திருந்தோம். தற்போதைக்கு இந்தக் கேமியோ கதாபாத்திரம் போதும்” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,500.. பட்ஜெட்டைத் தயார் செய்யும் முதலமைச்சர் விஜய்..!
‘இதயம் முரளி’ படக்குழு மிகவும் இளமையான மற்றும் உற்சாகமான குழுவாக இருப்பதாகவும், அவர்களுடன் பணியாற்றியது மீண்டும் கல்லூரி நாட்களுக்குச் சென்றது போன்ற உணர்வைத் தருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாளவிகா மோகனன் தற்போது விஜய் சேதுபதியுடன் ‘பாக்கெட் நாவல்’ (Pocket Novel) படத்திலும், கார்த்தியுடன் ‘சர்தார் 2’ (Sardar 2) திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

