தமிழகம் முழுவதும் மின் பகிர்மான வட்டங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் மின் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அபராதத் தொகையாக சுமார் ரூ.98.40 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 15 முதல் ஜூன் 30, 2026 வரை இந்தச் சோதனைகள் நடைபெற்றன. மொத்தம் 76 மின் திருட்டுகள் மற்றும் 24 மின் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட பல்வேறு அமலாக்க கோட்டப் பிரிவுகளின் மூலம் அபராதமாக மொத்தம் ரூ.98,39,594 வசூலிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர்கள் தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டு, குற்றவியல் நடவடிக்கையைத் தவிர்க்க முன்வந்ததால், சமரசத் தொகையாக ரூ.4,77,500 செலுத்தப்பட்டது. இதனால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை.
கண்ணீர் மல்கப் பெண் புகார்.. விஜய் ஆண்டனி பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ..!
சென்னை வடக்கு, சென்னை மேற்கு, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பகுதிகளில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் மின் திருட்டு தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க அந்தந்தப் பகுதி அமலாக்கக் கோட்டப் பிரிவுகளைத் தொடர்புகொள்ளலாம்:
- கோவை அமலாக்கக் கோட்டப் பிரிவு: 94430 49456
- சென்னை அமலாக்கக் கோட்டம்: 94458 57591
- மதுரை அமலாக்கக் கோட்டம்: 94430 37508
- திருச்சி அமலாக்கக் கோட்டம்: 94433 29851
இத்தகைய அதிரடிச் சோதனைகள் மூலம் மின் திருட்டைக் கட்டுப்படுத்த மின்சார வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

