திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த ஜூன் 21-ம் தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. இதில் வடமாநிலத் தொழிலாளர்கள் 74 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக தொழிற்சாலையின் உரிமையாளர்கள் 2 பேர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!
விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள 500 மீட்டர் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, 300 மீட்டர் சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

