வீட்டில் இருந்த இருசக்கர வாகனங்கள், டிவி, பீரோ, கட்டில், சேர் என அனைத்து பொருட்களை நொருக்கி அட்டூளியம்.கோவை வழுக்கப்பாறையை சேர்ந்தவர் சிவக்குமார் – கல்பனா தம்பதி. கீரை வியாபாரம் செய்து வருகின்றனர்.
இவர்களது 19 வயது மகள் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
பதவிகள் வேண்டாம்.. தலைமை மீது அதிருப்தியில் உள்ளாரா எஸ்.பி. வேலுமணி?..
நேற்று கல்லூரி முடிந்து வந்த மாணவியை வீட்டில் அருகே இரு சக்கர வாகனத்தில் காத்திருந்த இளைஞர்களில் ஒருவர் ஐடி கார்டை பிடிங்கி, மாணவியை தாக்கியுள்ளார்.இது குறித்து மாணவியின் தந்தை சிவக்குமார், தாக்கிய இளைஞர் சூர்யாவை தட்டி கேட்டதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து, சிவக்குமார் மகளுடன் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றுள்ளனர்.
இதனிடையே, இரவு வீட்டிற்கு வந்த இளைஞர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்துள்ளனர்.
மேலும், சிவக்குமார் மற்றும் மகளை கொல்லாமல் விடமாட்டோம் எனவும் பேசியுள்ளனர்.இது குறித்து கேட்ட அக்கம் பக்கத்தினரையும் பத்திரங்களை வீசி அட்டூலியத்தில் ஈடுபட்டனர்.இதுவரை போலீஸார் புகாரை கூட எழுதி வாங்கவில்லை, மேலும், அட்டூலியத்தில் ஈடுபட்ட சூர்யாவின் தந்தை தவெகவில் இருப்பதாக கூறுப்படுகின்றது.

