மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிவந்த பள்ளிச் சிறுமிகள் சிலரின் கால்களை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொட்டு முதலுதவி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது.
வெயிலின் காரணமாக மயக்கமடைந்த மாணவிகளுக்கு ஒரு தகப்பன் என்ற முறையில், மனிதாபிமான உணர்வோடு நான் செய்த முதலுதவி ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு உள்நோக்கம் கற்பிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல.. மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்..!
ஏதோ ஒரு வகையில் எனது அணுகுமுறை தவறாகப் புரிந்து கொள்ளப்படும் நிலை ஏற்பட்டதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்
என்று அமைச்சர் விஸ்வநாதன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

