நடிகை குஷ்பு – இயக்குநர் சுந்தர்.சி தம்பதியரின் இரண்டாவது மகள் அனந்திதா. இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர், சமீபத்தில் வெளியான ‘டபுள் ஆக்குபன்ஸி’ திரைப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
அனந்திதாவும் அவரது சகோதரி அவந்திகாவும் சிறு வயது முதலே சமூக வலைத்தளங்களில் கடுமையான உருவக் கேலிகளைச் சந்தித்து வந்தனர். இதுகுறித்து அனந்திதா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார்.
உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

அதில், எனக்கு 15 வயது இருக்கும்போது நான் குண்டாக இருந்ததால், ‘நீ அசிங்கமாக இருக்கிறாய், உன் அம்மாவை பார் எவ்வளவு அழகாக இருக்கிறார்’ என்று ஒரு குழந்தையென்றும் பாராமல் பேசினார்கள். சரி என்று இப்போது நான் எடையைக் குறைத்து ஃபிட்டாக மாறிய பின்பு, ‘ஏன் எலும்புக்கூடு மாதிரி இருக்கிறாய்? திருநங்கை மாதிரி இருக்கிறாய்?’ எனக் கேட்கிறார்கள். நான் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? உங்களுக்கு என்னதான்டா வேண்டும்? என்று நெட்டிசன்களுக்கு அனந்திதா மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

