பிரபல பின்னணிப் பாடகியும் ஆர்ஜேயுமான சுசித்ரா, கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு தனிப்பட்ட மற்றும் சமூக ஊடகச் சர்ச்சைகளில் சிக்கி, திரையுலகில் பாட வாய்ப்புகளின்றி ஒதுங்கியிருந்தார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில், பாடகி சுசித்ரா திடீரென மேடையில் தோன்றிப் பாடினார். விஜய் ஆண்டனி இசையில் உருவான ஹிட் பாடல்களை மேடையில் சுசித்ரா பாடியபோது, அரங்கமே அதிர்ந்தது. அவரது கம்பீரமான குரலும் துள்ளலான நடனமும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன.
என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுசித்ராவுக்குப் பொதுமேடையில் பாடும் வாய்ப்பை வழங்கி, அவரது கலைப் பயணத்திற்கு மறுவாழ்வு கொடுத்துள்ள விஜய் ஆண்டனியின் பெருந்தன்மையை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி, அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

