திரைப்பட விழாவொன்றில் கலந்துகொண்ட இயக்குநர் பா.இரஞ்சித், தான் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில் இயக்குநர் சசி தன்னை “ரவுடி” என்று அழைத்த சுவாரசியமான பழைய நினைவுகளை மேடையில் பகிர்ந்துள்ளார். இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘சொல்லாமலே’, ‘ரோஜாக்கூட்டம்’ போன்ற படங்களில் பா.இரஞ்சித் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
அந்தப் பழைய நாட்களைப் பற்றி அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். மேடையில் பேசிய பா.இரஞ்சித், “அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்த்தப்ப, என்னோட ஹேர்ஸ்டைல் மற்றும் தோற்றத்தைப் பார்த்துட்டு சசி சார் என்னை ‘ரவுடி’ என்றே கூப்பிடுவார். ஆனா, என் மேல அவருக்கு எப்பவுமே ஒரு தனி பாசமும் அக்கறையும் இருந்தது” என்று பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!
“சினிமாவில் ஷாட் வைப்பது எப்படி, கதையை எப்படி நேர்த்தியாகக் கையாள்வது போன்ற பல முக்கிய நுணுக்கங்களை நான் சசி சாரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். அவர் எனது சினிமா பயணத்தில் மிக முக்கியமான குரு” என்றும் பா.இரஞ்சித் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வளர்ந்து நிற்கும் பா.இரஞ்சித், தான் உதவி இயக்குநராக இருந்த காலத்து பிளாஷ்பேக் கதையை வெளிப்படையாகப் பேசிய இந்த வீடியோ தற்போது சினிமா வட்டாரங்களிலும் நெட்டிசன்களிடையேயும் வைரலாகி வருகிறது.

