தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குறித்து சமீபத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பேசிய நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி ஒரு விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அதில், தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது.
நாங்கள் கூட மதுரையில் பேசிக் கொண்டிருக்கும்போது 150 கோடிகள் செலவு செய்வது குறித்து பேசினோம். ரூபாய் 150 கோடிகள் எதற்காக செலவு செய்தார்கள் ரூபாய் 1500 கோடிகள் எடுப்பதற்கு தானே, ஒரு கட்சியால் எல்லாம் காணாமல் செய்து சல்லடை ஆக்கிவிட்டது.
அண்ணா.. அப்படியே ‘லியோ 2’ பண்ணிடுங்க.. முதலமைச்சர் விஜய் சந்தித்த லோகேஷ் கனகராஜ்..!
அதன் பின் பதவி ஏற்பு விழா நடைபெற்ற போது நான் அதை தொலைக்காட்சியில் கண்டு களித்தேன். முதல் வரிசையில் ஒரு மூன்று பேர் மிஸ்ஸிங், அது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது. உங்களை வீழ்த்த நினைத்தவர்கள் வீட்டிற்க்கே சென்று அவர்களுடன் கைகூலுக்கி அவர்கள் தோள் மீது கை போட்டு அன்பு செலுத்திய பண்பாளர் நீங்கள். அதனால், அந்த மூன்று பேரை அப்படியே விட்டு விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது.
தலைவா விட்டுடாதீங்க, ஏனெனில் பல கோடி இளைஞர்கள் உங்கள் பின்னால் வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் குடும்பம் தான் மிகவும் முக்கியமானது என்றும், மனைவி மீதும் பெற்ற பிள்ளைகள் மீதும் ஒரு பிடிப்பும் அவர்கள் தான் முக்கியம் என்ற எண்ணமும் வரவேண்டும். அதை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று சமுத்திரக்கனி அங்கு பேசியிருந்தால், முதலமைச்சர் விஜயின் மனைவி மகன் மற்றும் மகள் குறித்து தான் அவர் இவ்வாறு பேசியதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

