தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தமிழக வெற்றி கழகம் தனிப்பெருமாண்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில், தமிழக வெற்றி கழகம் ஈடுபட்டது.
தங்களுக்கு ஆதரவு தருமாறு திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆதரவு எம்எல்ஏ ஆதரவு எண்ணிக்கை 120 ஆக தமிழக வெற்றி கழகத்திற்கு உயர்ந்துள்ளது.
விஜய் கையில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு.. நேரம் ஒதுக்கிய ஆளுநர்.. க்ரீன் சிக்னல்..!
இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி மீண்டும் ஆளுநரை சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ள நிலையில் ஆளுநர் இன்று விஜய்க்கு ஆறு முப்பது மணிக்கு நேரம் ஒதுக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்க புறப்பட்டார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பனையூர் தலைமை அலுவலகம் முதன்முறையாகத் தொண்டர்களுக்காகத் திறக்கப்பட்டது. ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பனையூரில் குவிந்ததால் உற்சாகம் கரைபுரண்டது.

