நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பு ஆகி வருகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மே ஏழாம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில், அவரிடத்தில் பெரும்பான்மைக்கான அந்த மேஜிக் நம்பர் 118 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி கூட்டணியில், இணைந்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். இது மட்டும் இல்லாமல், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனக்கு ஆதரவு அளிக்கும்படி வீசிக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி இருந்தார். இந்த மூன்று கட்சிகளிடம் மொத்தம் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இப்படி இருக்கையில், அவர்கள் இன்னும் தங்களது முடிவை அறிவிக்காமல் இருக்கின்றனர்.
மெஜாரிட்டி சிக்கலில் விஜய்.. வெங்கட் பிரபு பகிர்ந்த ‘அந்த’ ஒரு வசனம்..!
இதுகுறித்து, பிரகாஷ்ராஜ் அவரது எக்ஸ் தள பக்கத்தில் பாஜக தூண்டுதலின் பேரில் கவர்னர் செயல்படக்கூடாது என்றும், தனி பெரும்பான்மை நிரூபித்து தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைய வேண்டும் எனவும், விஜய்க்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், கவர்னரின் பிஹேவ் பண்றது டிஸ்கஸ்டிங் ஆக உள்ளது. விஜய் ஃப்ளோர் டெஸ்டில் தான் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும். அதிகப்படியான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயை ஆளுநர் பதவி ஏற்க அழைப்பதுதான் ஜனநாயகம் எனவும் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
This Governor s behaviour is Disgusting .. unacceptable and unconstitutional. We may have differences … but Vijay has got the mandate . He should be allowed to claim his right on the floor of the house. #justasking https://t.co/T72CVedXhJ
— Prakash Raj (@prakashraaj) May 7, 2026

