ராஜஸ்தானின் ஜோத்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மரணம் அடைந்துள்ளார். தனது பூர்வீக ஊரான ஜோத்பூருக்கு சென்ற வழியில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் மூலமாக நாட்டாமை, சூரிய வம்சம் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்திருந்தார்.
பதவியேற்பு நடக்குமா?.. விஜய் முதல்வராகும் விழாவில் எதிர்பாராதத் தடை..!
ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவாவின் அப்பாவான ஆர் பி சவுத்ரி விபத்தில் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இவரது மறைவுக்கு, இறுதி அஞ்சலி செலுத்த விஜய் இதற்காக மயிலாப்பூரில் உள்ள ஆர்.பி. சௌத்ரியின் இல்லத்திற்குச் சென்று உள்ளார். தனது ஆரம்பகால திரைப் பயணத்தில் மிகப்பெரிய வெற்றிகளைத் தந்த தயாரிப்பாளரின் மறைவு தனக்கு பேரிழப்பு என விஜய் உருக்கமாகத் தெரிவித்தார்.

‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் விஜய்யை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர் இவர் என்பதால், விஜய் மிகவும் உருக்கத்துடன் அஞ்சலி செலுத்தினார். அவருடன் நடிகர் ஜீவா மற்றும் குடும்பத்தினருக்கு விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

