தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை காங்கிரஸ் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் விஜயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நிலையில், அக்காட்சிக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்களும் கூட வெளியானது. ஆனால், திடீரென டெல்லி காங்கிரஸ் தலைமை திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று அறிவித்துவிட்டது.

இதனால், காங்கிரஸ் கட்சியில் இந்த திடீர் மனமாற்றத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரும் தான் காரணம் என்று அப்போதே செய்திகள் பரவலாக பேசப்பட்டது. தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் தேர்தலுக்குப் பின் இப்போது பெரும்பான்மையினை நிரூபிக்க தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் கை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் திடீரென ஆதரவு கொடுக்க பல்வேறு காரணங்களும் தற்போது கூறப்பட்டு வருகிறது. அதாவது, நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு திமுக பக்கபலமாக இருந்து வருகிறது. அதிக எண்ணிக்கையில் எம்பிக்களை வைத்திருப்பதால் அந்த கூட்டணியில் திமுக செல்வாக்குடன் திகழ்ந்து வந்தது.
என்னை மன்னித்து விடுங்கள்.. விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட சேரன்.. இணையத்தில் வைரலாகும் பதிவு..!

அடுத்து, 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்குள் தமிழ்நாட்டில் தற்போது இழந்த மக்கள் செல்வாக்கை திமுக மீண்டும் பெற்று விடுமா என்பது பெரிய கேள்விக்குறியாக தான் இருந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் அதை உணர்ந்துதான் இப்போது தமிழக வெற்றி கழகம் பக்கம் கைகோர்த்து இருக்கிறது. இடையில், உள்ளாட்சி தேர்தலுக்கு வர இருப்பதால் அதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு கை கொடுத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வளர முடியும் என்றும் அக்கட்சி தலைமை நினைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

