நீண்ட அடர்த்தியான கூந்தல் யாருக்குத்தான் பிடிக்காது. ஒவ்வொருவரும் தங்களுடைய கூந்தல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவோம். ஆனால், என்ன செய்தாலும் பெரிதான பலன் இருக்காது. மேற்பூச்சுக்காக பயன்படுத்தும் பல பொருட்கள் உங்களின் கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

முன்னதாக, உங்கள் தலைமுடியை விரைவாகவும் அடர்த்தியான தலைமுடியை பெறுவதற்கு தேங்காய்ப் பால் அமைகிறது. அதாவது, தேங்காய்ப் பால் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு அது வழங்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காண்போம். தினசரி அழுக்கு, மன அழுத்தம் மற்றும் பொது பராமரிப்பு குறைவால் முடி உதிர்வு மற்றும் மெலிந்த தோற்றம் ஏற்படுகிறது. அதற்காக இயற்கை வழிகளில் முடி வளர்ச்சி அதிகரிக்க முடியும்.
தேங்காய் பால் மற்றும் தேன்

ஹீரோயின் போல பளபளப்பான சருமத்திற்கு.. இந்த முலாம்பழம் பேஸ் பேக்களை ட்ரை பண்ணுங்க..!
தேங்காய் பாலில் உள்ள தேவையான கொழுப்பு அமிலங்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடியின் வேரில் இருந்து நுனிவரை போதுமான ஆரோக்கியத்தை கொடுக்கின்றன. இவை இயற்கையான மெருகுட்டியாகவும் செயல்படுகிறது. சிலருக்கு கூந்தலில் வறட்சி ஏற்படுகிறது. அவர்கள் அரைக்கப்பட்ட புதிய அல்லது பதப்படுத்தப்பட்ட தேங்காய் பாலுடன் இரும்பு சத்து வைட்டமின் சி நிறைந்த கலவையை கூந்தலில் உபயோகிக்க வேண்டும்.
இது உங்களின் வேர் முதல் நுனிவரை வலுவாக்குவதோடு முடியின், வேர்க்கால்கள் வரை நன்றாக ஊடுருவி செல்லும். மேலும், இதனுடன் இரண்டு டீஸ்பூன் தேனை முடியில் கலந்து தடவுவது ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. 40 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலாச வேண்டும்.
தேங்காய் பால் மற்றும் தயிர்

ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு தேங்காய் பால் மற்றும் தயிர் கலந்த ஹேர்பேக்கை நீங்கள் முயற்சி செய்யலாம் முதலில் அரைக்கப் திக்கான தேங்காய் பாலை எடுத்து அதுடன் இரண்டு தேக்கரண்டி தயிரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதை தலையில் தடவுவது சேதமடைந்த முடியை சரி செய்யும். மேலும், மென்மையான பளபளப்பை தருகிறது. இதை 30 நிமிடங்கள் வைத்திருந்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுவது சிறந்தது.
தேங்காய் பால் மற்றும் கற்றாழை

எளிதில் உடையக்கூடிய முடியின் நுனிவேர்களுக்கு கற்றாழையுடன் கூடிய தேங்காய் பால் சிறந்த தீர்வாக அமைகிறது. வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த அரை கப் தேங்காய் பாலை எடுத்து அதில் 2 டீஸ்பூன் கற்றாழை ஜல்லை சேர்க்கவும். இதை நன்றாக கலந்து தலைமுடியில் 45 நிமிடம் கழித்து வாஸ் செய்ய உச்சந்தலையையும் முடியையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி புரிகிறது.
தேங்காய் பால் மற்றும் முட்டை

கூந்தலை பலமாக்க விரும்புபவர்கள் வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு சத்து நிறைந்த தேங்காய் பால் மற்றும் முட்டையை பயன்படுத்துங்கள். இது உங்கள் கூந்தலுக்கு வேர் முதல் நுனிவரை ஊட்டமளித்து வலுப்படுத்தும். முட்டையையும் தேங்காய் பாலையும் ஒன்றாக கலந்து உச்சந்தலையில் மெதுவாக தடவ இது ரத்த ஓட்டத்தை தூண்டி முடியும் வளர்ச்சிக்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.
தேங்காய் பால் மற்றும் வாழைப்பழம்

தேங்காய் பாலில் நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தை எடுத்தது மென்மையாகும் வரை நன்றாக மசித்து கூந்தலில் தடவ வேண்டும். 45 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதில், இருக்கக்கூடிய இயற்கையான எண்ணைகள் முடியை மென்மையாக்கி சேதத்தை கட்டுப்படுத்துகிறது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

