மகாலட்சுமியின் அம்சம் கொண்ட சங்கு மாலை யாரெல்லாம் அணியலாம், யாருக்கு இது அதிக பலன் தரும் மற்றும் அதன் ஆன்மீக விதிமுறைகள் குறித்து இந்த பதிவில் காண்போம். பாற்கடலில் மகாலட்சுமியுடன் தோன்றியதாகக் கருதப்படும் சங்கு, மங்கலப் பொருட்களில் முதன்மையானது. இதனை மாலையாக அணிவது ஒருவருக்குப் பல நன்மைகளைத் தரும்.
யாரெல்லாம் சங்கு மாலை அணியலாம்?
- லட்சுமியின் அம்சமாகக் சங்கு கருதப்படுகிறது. தொழிலில் முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள், பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள், சங்கு மாலையை அணிவது விசேஷமானது. இது வீட்டில் ஐஸ்வர்யத்தைப் பெருக்கும்.
- சங்கு சந்திரனின் ஆதிக்கம் கொண்டது. அடிக்கடி கோபப்படுபவர்கள், மன அழுத்தம் மற்றும் மனக்குழப்பத்தில் இருப்பவர்கள் இந்த மாலையை அணிவதன் மூலம் மனத் தெளிவையும், நிம்மதியையும் பெறலாம். இது எதிர்மறை எண்ணங்களை நீக்கி நேர்மறை ஆற்றலை வழங்கும்.
செவ்வாய் தோஷம் நீங்க.. பவள மாலை செய்யும் அற்புத மாற்றங்கள்..!

- ஜாதகத்தில் சந்திர திசை நடப்பவர்கள் அல்லது சந்திர தோஷம் உள்ளவர்கள் சங்கு மாலை அணிவது ஒரு சிறந்த பரிகாரமாகும். இது சந்திரனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து நற்பலன்களைத் தரும்.
- படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறும் மாணவர்கள் சங்கு மாலையை அணிந்தால் ஞாபக சக்தி மற்றும் ஒருமுகப்படுத்தும் திறன் (Concentration) அதிகரிக்கும் என்று ஆன்மீக பெரியோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சங்கு மாலையின் பிற நன்மைகள்
- வீட்டில் நிலவும் வாஸ்து குறைபாடுகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிக்கும் ஆற்றல் சங்கு மாலைக்கு உண்டு.
- சங்கு மாலையை உடலில் அணியும்போது அது நரம்பு மண்டலத்தைச் சீராக்கி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாகக் நம்பப்படுகிறது.
- மற்றவர்களின் கண் திருஷ்டி மற்றும் பொறாமைப் பார்வைகளிலிருந்து காக்கும் கவசமாக இது செயல்படும்.

அணியும் முறை
- சங்கு மாலையை அணிவதற்கு முன் பால் மற்றும் கங்கை நீரால் (அல்லது சுத்தமான நீரால்) கழுவித் தூய்மைப்படுத்த வேண்டும்.
- வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமைகளில் மகாலட்சுமியின் முன் வைத்துப் பூஜித்து அணிவது அதிக பலனைத் தரும்.
- இரவில் தூங்கும் போது கழற்றி வைப்பது நல்லது. மீண்டும் காலையில் குளித்த பிறகு அணியலாம்.
குறிப்பு
ஆன்மீக நம்பிக்கையின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. முழுமையான நம்பிக்கையுடன் அணியும் போது அதன் பலன்கள் இரட்டிப்பாகும்.

