தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன். இவர் தான் இயக்கிய முதல் படத்திலேயே அதீத கவனத்தை ஈர்த்த பிறகு இயக்கிய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்ட பல வெற்றி தோல்விகளை சந்தித்து இருந்தாலும், கோலிவுட் வட்டாரத்தில் தனக்கென தனி மதிப்பை கொண்டிருக்கிறார்.

ஒரு பட விழாவில் பேசிய பார்த்திபன் நான் ஒரு நாயுடு பையன் ஆனால் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். அதன் காரணமாக தெலுங்கு எனக்கு வராது. அடுத்த முறை இங்கே வரும்போது தெலுங்கில் நன்றாக பேசும்படி கற்றுக் கொள்வேன். இது சத்தியம் எனக் கூறியிருந்தார்.
விஜய் வீட்டின் முன் விடிய விடிய தியானம்.. எட்டி எட்டி பார்த்து அடம்பிடித்த மூதாட்டி..!

எதற்காக இப்படி சாதியை தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் உடனடியாக வருத்தம் தெரிவித்தார். மேலும், தனக்கு சாதியே பிடிக்காது என்றும், அந்த மேடையில் பதற்றத்தின் உச்சியில் இருந்தேன். அப்படி பேசியது தவறுதான் என விளக்கம் அளித்தார்.

ஆனால், அவரை பலரும் விடுவதாக இல்லை. இப்படி இருக்கும் நிலையில், தற்போது புதிய வீடியோவை ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், சாதி இல்லை மதம் இல்லை என்று சான்றிதழ் பெறப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி, பார்த்திபனுக்கு சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை கொடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனால், அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு வாரத்தில் அந்த சான்றிதழை பார்த்திபனுக்கு வழங்க வேண்டும். அதே சமயம் விளம்பரத்திற்கு வேண்டுமானாலும் இந்த சான்றிதழ் பயன்படும். சாதி மதமற்றவர் என சுயபிரகடனம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாம் நடத்தை மூலம் அதை காட்ட வேண்டும் என அதிரடியாக தெரிவித்திருந்தது. இதனை குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் விளம்பர பிரியன் பார்த்திபன் நடுமண்டையில் குட்டிய நீதிமன்றம் என குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக, கடந்த 27ஆம் தேதி சோளிங்கநல்லூரில் தாசில்தார் பார்த்திபனுக்கு சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

