தமிழ்நாட்டு அரசியலில் விஜய்க்கு எவ்வளவு மவுஸ் இருக்கிறது என்பது குறித்து பார்க்க பலரும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில், நடிகர் விஜய் தனக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வரவேண்டும் என்று முருகர் கோவில், சாய்பாபா கோவில் என பிரார்த்தனைகள் செய்து வருகிறார். இவரது கட்சியினரும் அவர்களுக்கு அருகில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் சென்று பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள்.

இப்படி இருக்கையில், நடிகர் விஜய் தற்போது சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த நாளில் மூதாட்டி ஒருவர் வீட்டு வாசலில் அமர்ந்து விடிய விடிய தியானம் செய்துள்ளார். மேலும், விஜய் வீட்டு வாசலில் அவர் அமர்ந்திருந்ததை பார்த்த பலரும் விஜயை சந்திப்பதற்காக தான் இந்த பாட்டி இப்படி செய்து வருகிறார் என்று யோசிக்க தொடங்கிவிட்டனர்.
ஏன் ஓட்டு போடல?.. லோகேஷ் கனகராஜ் ரகசியத்தை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி..!

வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த அந்த மூதாட்டியிடம் சிலர் பேச்சு கொடுத்தால் ரஃப் அண்ட் டஃப் ஆக பதிலளித்து அனைவரையும் மிரள வைத்துவிட்டார். அவரிடம் இருந்து இப்படியான பதில்களை யாருமே எதிர்பார்க்கவில்லை. தலை சுற்றளாக இருக்கிறது என்று அந்த மூதாட்டி தெரிவித்த நிலையில், உடனே வாங்க அம்மா போய் சாப்பிட்டு வரலாம் என்று ஒருவர் கூறினார்.

அதற்கு அந்த மூதாட்டி உடனே எனக்கு தலை சுற்றினால், உனக்கு என்ன என்று அடாவடித்தனமான பதிலை கேட்ட அங்கிருந்தவர்கள் அனைவரும் விஜய் வீட்டு வாசலில் மயங்கி விழுந்து ஏதாவது ஆகிவிட்டால், அதற்கும் விஜய் தான் என் காரணம் என்று சொல்வார்களே என அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் புலம்பி வருகிறார்கள். மேலும், இப்படி வீட்டின் முன் தர்ணா இருந்து விஜயை சந்தித்து விடலாம் என்ற தவறான முன் உதாரணம் ஆகிவிடும். எனவே, விஜய் அந்த மூதாட்டியை சந்திக்காமல் இருப்பது தான் நல்லது என்று பலர் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

