ஒரு சமயத்தில் கௌதம் மேனன் தொட்டதெல்லாம் ஹிட் ஆனதால் ஃபுல் ஃபார்மில் துருவ நட்சத்திரம் படத்தை எடுத்திருந்தார். ஆனால், பல வருடங்கள் ஆகியும் கடன் பிரச்சனையால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில், அந்த படம் இப்போது ரிலீஸாகிவிடும். அப்போது ரிலீசாகிவிடும் என அறிவிப்புகள் மட்டுமே தான் வந்து கொண்டிருந்தது.

வசமாக சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்.. ராஜமாதா லுக்கில் அசத்தும் ஜாய் கிரிஸில்டா..! (வீடியோ)
இந்த நிலையில், புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, இன்று கௌதம் மேனன் நீதிமன்றத்தில் ஒரு பிரமான பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அதில், தான் யார் யாருக்கு கடன் கொடுக்க வேண்டும். எவ்வளவு கொடுக்க வேண்டும். உள்ளிட்ட விவரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த கடன் தீர்க்க பட்டால், மே 27ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய கௌதம் மேனன் தயாராகி இருப்பதாகவும், மேலும் இந்த விவரங்களை சரி பார்க்க சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் ஒரு நாள் அவகாசம் வழங்கி இருக்கிறது.

முன்னதாக, முதலில் இந்த கதையை ரஜினியிடம் சொன்னபோது அவரும் ஓகே சொல்லும் மனநிலையில் இருந்தாராம். ஆனால், சில காரணங்களால் கடைசி நேரத்தில் அவர் நடிக்கவில்லை. அவரை தொடர்ந்து சூர்யாவுக்கும் இந்த கதை சென்றது. அவரும் நடிக்க மறுத்துவிட்டார். காக்க காக்க, வாரணம் ஆயிரம் என பல படங்களை கொடுத்த என்னை நம்பி சூர்யா அதில், நடித்திருக்க வேண்டும் என்று சமீபத்தில் கௌதம் மேனன் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

