Close Menu
    What's Hot

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடக்கம்; தேர்வு மையங்களில் கடுமையான கண்காணிப்பு..!
    தமிழ்நாடு

    பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடக்கம்; தேர்வு மையங்களில் கடுமையான கண்காணிப்பு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 2, 2026Updated:March 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    student UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: 8.27 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

    பிளஸ் 2 வகுப்பில் 7,465 மாணவர்கள் ‘ஸ்கிரைப் உதவியுடன் தேர்வெழுதவுள்ளனர். பொதுத் தேர்வெழுத 281 சிறைவாசிகள் பதிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை (மார்ச் 2) முதல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தேர்வை 27,783 தனித் தேர்வர்கள் உள்பட 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதவுள்ளனர்.


    தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2-ஆம் தேதி முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை பள்ளி மாணவர்கள் 7 லட்சத்து 99,692 பேர், தனித் தேர்வர்கள் 27,783 பேர் என மொத்தம் 8 லட்சத்து 27,475 பேர் எழுதவுள்ளனர்.


    பிளஸ் 2 வகுப்பில் 7,465 மாணவர்கள் ‘ஸ்கிரைப் உதவியுடன் தேர்வெழுதவுள்ளனர். பொதுத் தேர்வெழுத 281 சிறைவாசிகள் பதிவு செய்துள்ளனர். இதற்காக 3,412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுப் பணியில் தினமும் 49,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.


    பொதுத் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க சுமார் 4, 900-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.முன்னதாக, பொதுத் தேர்வு நேரங்களில் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும், வகுப்பறையில் எத்தனை மாணவர்களை அமர வைக்க வேண்டும், வகுப்பறையில் குடிநீர், பள்ளிகளில் கழிப்பறை வசதி சரியாக உள்ளதா என்பது குறித்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள், தேர்வறைக் கண்காணிப்பாளர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.


    தொடர்ந்து தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.நிகழாண்டு மேல்நிலைத் தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்களில் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு, பெரிய எழுத்துக்களில் ஏ4″அளவிலான மடக்கைப் புத்தகங்கள் (லாகரிதம்) 20,000 எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளது.


    இவ்வாண்டுமுதல் கணக்குப் பதிவியல் பாடத்துக்கு தேர்வர்கள் நிரலாக்க வசதியற்ற சாதாரண கால்குலேட்டர் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இருக்கை வசதி, சொல்வதை எழுதுபவர் நியமனம் (ஸ்கிரைப்), கூடுதல் நேரச் சலுகை வழங்குதல் போன்றவற்றில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.


    பிளஸ் 2 பொதுத் தேர்வின் முதல் நாளான திங்கள்கிழமை தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறவுள்ளன. முன்னதாக, இந்த வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப். 9 முதல் பிப்.14 வரை நடத்தப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    12th public exam update Exam centers Tamil Nadu Tamil Nadu Plus Two exam TN board exam news கல்வி செய்திகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு மாணவர்கள் தேர்வு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்.. முதலமைச்சர் விஜய் திட்டவட்ட மறுப்பு..!

    August 7, 2026

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026
    Don't Miss

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மொறுமொறுப்பான கார தோசை மற்றும் சுவையான வெள்ளைச் சட்னி மிக எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்கம்.

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.