200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மின் கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளுக்கான மின் கட்டணம் தற்போது 4 மடங்கு வரை உயர்ந்துள்ளதற்குச் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “200 யூனிட் வரை இலவசம் என்று அறிவித்துவிட்டு, இப்போது மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்திருப்பது எப்படி?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தாமதமாக மின் அளவீடு (Meter Reading) எடுக்கப்பட்டதே இந்த திடீர் உயர்வுக்கு முக்கிய காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தாமதமான கணக்கீட்டினால் மின் பயன்பாடு 500 யூனிட்டிற்கு மேல் அதிகரித்து, இலவச மின்சாரத்தின் பலன் கிடைக்காமல் போனதோடு, கட்டண விகிதமும் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மழை வெளுக்கப் போகுது.. 7 மாவட்டங்களுக்கு வாய்ப்பு.. மறக்காம குடை எடுத்துட்டு போங்க மக்களே..!
பாதிக்கப்பட்ட மக்களின் பன்மடங்கு அதிகரித்துள்ள மின் கட்டணத்தை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

