கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட 16 வயது மாணவி, புகார் அளிக்கப்பட்ட ஒரே மணி நேரத்திற்குள் காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
கண்ணம்பாளையம், மனோஜ் நகர் பகுதியில் வசித்து வந்த மாணவி திக்ஷண்யா, மாலையில் யாரிடமும் தெரிவிக்காமல் வெளியேறிச் சென்றது குறித்து அவரது குடும்பத்தினர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், கருமத்தம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர் சூலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில், மாணவி கரூர் செல்வதற்காகப் பேருந்து ஏறியது தெரியவந்தது. உடனடியாக உஷார்படுத்தப்பட்ட காவல்துறையினர், தொழில்நுட்ப உதவியுடன் துரிதமாகச் செயல்பட்டு, கரூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த மாணவியை வெறும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பத்திரமாக மீட்டனர். துரிதமாகச் செயல்பட்டு மாணவியை மீட்ட சூலூர் காவல்துறையினருக்குப் பொதுமக்களிடையே பாராட்டு குவிந்து வருகிறது.

