‘திருநெல்வேலி’ திரைப்படத்தில் நடித்த நடிகர் கரிகாலன் குறித்த இந்தத் தகவல் பலரையும் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரைப் பற்றிய அப்டேட் வெளியானதால், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர். பிரபு நடிப்பில் 2000-ம் ஆண்டில் வெளியான ‘திருநெல்வேலி’ திரைப்படத்தில், ‘நெல்லை’ பாஷை பேசி அனைவரையும் கவர்ந்தவர் கரிகாலன்.
விஜய்யின் கட்சியில் தனுஷ் இணைகிறாரா?.. ஒரு ட்வீட்டால் கிளம்பிய புயல்..!
அந்தப் படத்தில் அவரது நடிப்பு மற்றும் நகைச்சுவை வசனங்கள் மிகவும் பிரபலம்.
நீண்ட காலமாகத் திரையுலகில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் ஒதுங்கியிருந்த அவர், தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

“அன்று பார்த்த அதே துடிப்புடன் இருக்கிறார்”, “இவரைப் போன்ற கலைஞர்கள் ஏன் சினிமாவில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை?” என ரசிகர்கள் ஆதங்கத்துடனும், அவரைப் பார்த்த மகிழ்ச்சியிலும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

