தமிழக அரசியலில் சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்பே சோ ராமசாமி கூறிய கருத்து, தற்போது நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றங்களுடன் ஒத்துப் போவதால், அது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. துக்ளக் இதழின் வாசகர் ஒருவர், “தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி சேருவார்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த சோ ராமசாமி, “நிச்சயமாக வரும் காலத்தில் இந்த இரு கட்சிகளாலும் தனித்து வெற்றி பெற முடியாத ஒரு சூழல் உருவாகும். அந்தச் சூழ்நிலையில், அவை கூட்டணி அமைக்கும்” என்று தீர்க்கதரிசனமாகக் கூறியிருந்தார். தமிழகத்தின் 74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில், சுமார் 59 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகளின் (தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.) ஆதிக்கம் நீடித்து வந்தது.
ஆனால், நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றி கழகம்’ (த.வெ.க.) வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், த.வெ.க. கூட்டணி ஆட்சி அமைக்க முயன்றது. அந்தச் சமயத்தில், எப்போதும் எதிரும் புதிருமாக இருந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் பகைமையை மறந்து, த.வெ.க. அரசைத் தடுப்பதற்காகக் கைகோர்க்க முயன்றதாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகின.
திருப்பதி செல்லும் மூத்த குடிமக்களா?.. வரிசையில் காத்திருக்க வேண்டாம்..!
சோ ராமசாமி அன்று கணித்த அதே “வெற்றி பெற முடியாத சூழல்” இன்று நிஜமாகியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவரை ஒரு “அரசியல் தீர்க்கதரிசி” எனப் பலரும் சமூக வலைதளங்களில் வியந்து பேசி வருகின்றனர்.

