கரூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக முதலமைச்சர் விஜய் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு பிரம்மாண்டமான சாலைப் பேரணியை மேற்கொள்கிறார். இந்த நிகழ்வு தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை அவர் வழங்குகிறார்.
கிருஷ்ணராயபுரம் வட்டம், மனவாசி பகுதியில் ரூ. 1,700 கோடி முதலீட்டில் அமையவுள்ள பிரம்மாண்டமான காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். இது இப்பகுதியின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் முக்கிய திட்டமாகும்.
விமர்சனங்களைக் கண்டு விஜய் அஞ்சவில்லை.. முதல்வர் விஜய்க்கு ஆதரவாகப் பேசிய சஞ்சீவ்..!
முதலமைச்சரின் 10 கி.மீ சாலைப் பேரணி மற்றும் அரசு நிகழ்வுகளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கக் காவல் துறையினர் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த கால துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு அரசு பணி ஆணைகளை வழங்குவதும், மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவதும் இன்றைய பயணத்தின் மிக முக்கியமான அம்சங்களாகக் கருதப்படுகின்றன.

