‘மா இண்டி பங்காரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமந்தா அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், பேசிய அவர் ஒரு ஹீரோவை பிரம்மாண்டமாகக் காட்டுவதற்குப் பின்னால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் பல வருட உழைப்பும், கணிசமான முதலீடும் உள்ளது.
ஆண் நடிகர்களுக்கு அளிக்கப்படும் அதே அளவு நேரத்தையும், முதலீட்டையும், உழைப்பையும் பெண் நடிகைகள் மீது காட்டினால், அவர்களாலும் கண்டிப்பாக சூப்பர் ஸ்டார்களாக உருவாக முடியும்.
43 வயதில் நாளுக்கு நாள் வேற மாதிரி ஆகும் த்ரிஷா.. செம டஃப் கொடுக்குறாங்களே ப்பா..!
தனது ‘டிராலலா மூவிங் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் புதிய திறமைகளுக்கு வாய்ப்பளிக்கவும், தரமான கதைகளை உருவாக்கவும் அடுத்தடுத்த திட்டங்களில் தீவிரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் ஒரு நடிகையை வெறும் கவர்ச்சிக்காகவோ அல்லது இரண்டாம் கட்டமாகவோ பார்க்காமல், அவர்களையும் ஒரு ‘சூப்பர் ஸ்டாராக’ கட்டமைக்க சரியான முதலீடு அவசியம் என்பதை சமந்தா வலியுறுத்தியுள்ளார். இது திரையுலகில் தற்போது ஒரு முக்கியமான விவாதத்தை உருவாக்கியுள்ளது.

