முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முகப்பரு தழும்புகள் மற்றும் வெயிலால் ஏற்படும் டான் (Tan) ஆகியவற்றைப் போக்கி, சீரற்ற சரும நிறத்தைச் சரிசெய்ய ‘கருப்பு உளுந்து’ ஒரு சிறந்த இயற்கை மருந்தாகச் செயல்படுகிறது.
இரவு முழுவதும் ஊறவைத்த கருப்பு உளுந்தை நன்றாக அரைத்து, அதனுடன் பால், தயிர், தேன் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற இயற்கை பொருட்களை நம் சருமத்தின் தேவைக்கேற்ப கலந்து ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம். வாரத்திற்கு இரண்டு முறை இதனைப் பயன்படுத்தி வந்தால், கெமிக்கல் க்ரீம்கள் இல்லாமலேயே கரும்புள்ளிகள் நீங்கி முகம் இயற்கையாகவே பளபளக்கும்.
- இரவு முழுவதும் ஊறவைத்த உளுந்தை அரைத்து, அதனுடன் பால் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இது வறண்ட சருமத்தை மென்மையாக்கி, பருக்களைக் குறைக்கும்.
- அரைத்த உளுந்துடன் தயிர் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது சூரியக் கதிர்களால் ஏற்பட்ட டானை (Sun Tan) நீக்கும்.
முட்டை சாப்பிட மாட்டீங்களா? கவலை விடுங்க.. ஹெல்தி புரோட்டீன் டயட்..!
- உளுந்து விழுமியுடன் சுத்தமான தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால், முகம் உடனடியாக பளபளப்பு (Glow) பெறும்.
- உளுந்து விழுது, அரிசி மாவு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் லேசாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். இது சிறந்த ஸ்க்ரப்பாகச் செயல்பட்டு கரும்புள்ளிகளை நீக்கும்.
- உளுந்து பேஸ்ட்டுடன் சில துளிகள் பாதாம் எண்ணெய் கலந்து தடவி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, சருமம் இளமையாக மாறும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

