பிரியாணினா யாருக்கு தான் பிடிக்காது. பிரியாணி நிறைய பேருக்கு பிடிக்கத்தான் செய்யும். குறிப்பாக, மட்டன் பிரியாணி தான் அதிக அளவில் நிறைய பேருக்கு பிடிக்கும். ஏன்னா, மட்டன் பிரியாணியோட சுவையும் மனமும் தனித்துவமா இருக்கும்.
இந்தியாவுல குறிப்பாக சொல்லனும்னா தென்னிந்தியாவுலதான் பெரும்பாலானவங்க பிரியாணிய விரும்பி சாப்பிடுறாங்க. இப்பேற்பட்ட பிரியாணி சில உணவுகளோட சேர்த்து சாப்பிடும் போது அது செரிமானத்துல இடையூறு பண்றது மட்டும் இல்லாம பல்வேறு பாதிப்புகளையும் உண்டாக்கும். அது பத்தி தான் இந்த பதிவுல நாம தெரிஞ்சுக்க போறோம்.
தர்பூசணி – முலாம்பழம்

குறிப்பாக, பிரியாணி சாப்பிட்ட உடன் தர்பூசணி முலாம்பழம் போன்ற நீர்சத்து இருக்கக்கூடிய பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இதை சாப்பிடும்போது பிரியாணியில் இருக்கக்கூடிய எண்ணெயுடன் நீர் சுத்து அதிகம் சேர்ந்து வாய்வு தொல்லையை உண்டாக்கிவிடும். வயிற்று உப்புசம் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். இதனால், சில பேருக்கு வயிற்று வலி, வயிற்று அசௌகரியம், குமட்டல் போன்ற உணர்வுகள் ஏற்படலாம். எனவே இந்த மாதிரி பிரச்சினைகளை தவிர்க்க பிரியாணியை சாப்பிட்டதும் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
பால் மற்றும் பால் பொருட்கள்

பிரியாணியை சாப்பிட்டதும் சிலருக்கு டீ, காபி குடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இந்த மாதிரி எண்ணம் இருக்கக் கூடியவர்கள் சிலருக்கு ஒன்றும் ஆகாது. ஆனால், பலருக்கும் பால் அல்லது பால் சம்பந்தப்பட்ட பொருட்களை பிரியாணி சாப்பிட்ட உடன் சாப்பிடும் போது அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
எண்ணெயில் பொரித்த உணவுகள்

பிரியாணியை சாப்பிடும் பொழுது எண்ணெயில் பொரித்த சிக்கன் 65 சேர்ந்து சாப்பிடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஆனால், எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், பிரியாணியில் இருக்கக்கூடிய கொழுப்பு அதிகமாக இருக்கும். சமயத்தில், நாம் எண்ணெயில் பொறித்த சாப்பாட்டை அல்லது உணவுப் பொருட்களை உட்கொள்ளும் பொழுது இன்னும் கொழுப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், செரிமான பிரச்சனை ஏற்படவும் கூடும். இப்படி எண்ணெயில், பொரித்த உணவுகளை பிரியாணி சாப்பிடும் போது அல்லது சாப்பிட்டதற்கு பிறகு சாப்பிடுவதை தவிர்பது சிறந்தது.
இனிப்பு பொருட்கள்

சிலருக்கு பிரியாணி சாப்பிட்டதும் இனிப்பாக எதாவது, சாப்பிடணும் அப்படிங்கற எண்ணம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு, செரிமான பிரச்சனை கண்டிப்பா ஏற்படும். இப்படி, சாப்பிடும்போது சர்க்கரை உடலில் அதிகரிக்கும்.
தண்ணீர் அதிகம் குடிக்கக்கூடாது

பிரியாணி சாப்பிட்டதுக்கு பிறகு உடனே அதிகப்படியான தண்ணீர் குடிக்க கூடாது. தர்பூசணி பழத்தைப் போலத்தான் தண்ணீரும் வயிற்றுக்குள்ள இருக்கும். பிரியாணியோடு எண்ணெய் சேரும்போது, வாய்வு தொல்லை போன்றவை வரலாம்.
இந்த உணவுகள் உயிருக்கு, ஆபத்தை ஏற்படுத்துமா?
பிரியாணி சாப்பிடும் போது அல்லது சாப்பிட்ட உடனே சாப்பிட்டா உயிருக்கு எந்த ஆபத்து ஏற்படாது. வயிற்றுப்போக்கு அப்புறம் அசௌகரியம் சந்திக்க நேரிடும். பிரியாணியை சமைக்கும் போது, இறைச்சிகள் சரியாக வேகாமல் இருந்தாலோ அதோட விளைவுகள் காரணமாக பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கும், அது மட்டும் இல்லாமல் பொதுவா ஒரு உணவை சாப்பிட்டதுக்கு அப்புறம் மற்ற உணவுகளை உட்கொள்ளக்கூடாது.
குறைந்தபட்சம் இரண்டு மணி நேர இடைவெளியாவது விடனும். மோசமான விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க இந்த மாதிரி விஷயங்களை நாம அவாய்ட் பண்ணிக்கிறது சிறந்தது. உணவு, உட்கொண்ட பின் உட்காராமல் ஒரு 20 நிமிடம் லேசான நடை பயிற்சி மேற்கொள்ளணும். முக்கியமாக, இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவது முற்றிலும் தவிர்க்கணும். முடிஞ்ச அளவுக்கு மதியாம் பிரியாணியை சாப்பிடலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

