சமூக வலைதளங்களில் விக்னேஷ் சிவன், நயன்தாரா பகிரும் புகைப்படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு இருக்கிறது. அதுவும் அவர்கள் வருடத்தில் 100 நாட்கள் குடும்பத்துடன் வெளிநாடு செல்வது சுற்றுலா செல்வது என பல விஷயங்களை ஈடுபட்டு வருவார்கள். அப்படி, அவர்கள் குடும்பமாக செம ஜாலியாக இருக்கும் தருணங்கள் தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த 3 பேர் மிஸ்ஸிங்.. தலைவா அவங்களை விட்டுடாதீங்க.. உருகிய சமுத்திரக்கனி..!
அதுவும் குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு தனி என்றே சொல்லலாம். இவர்களின் இரட்டை மகன்களான உயிர் மற்றும் உலக் என இருவரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஜாலியாக விளையாடும் புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்நிலையில், நயன்தாரா இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் கணவர் விக்னேஷ் சிவன் உடன் செம ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இது மட்டுமில்லாமல் தனது மகன்களுடன் விளையாடும் புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார். குறிப்பாக, காலையில் சூரியன் உதிக்கும் சமயத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என்பதால், அவை பார்ப்பதற்கே நன்றாக இருப்பதாக பலரும் லக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

