நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பு ஆகி வருகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மே ஏழாம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில், அவரிடத்தில் பெரும்பான்மைக்கான அந்த மேஜிக் நம்பர் 118 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி கூட்டணியில், இணைந்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். இது மட்டும் இல்லாமல், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனக்கு ஆதரவு அளிக்கும்படி வீசிக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி இருந்தார். இந்த மூன்று கட்சிகளிடம் மொத்தம் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
மெஜாரிட்டி சிக்கலில் விஜய்.. வெங்கட் பிரபு பகிர்ந்த ‘அந்த’ ஒரு வசனம்..!
இப்படி இருக்கையில், அவர்கள் இன்னும் தங்களது முடிவை அறிவிக்காமல் இருக்கின்றனர். இதுகுறித்து, இயக்குனர் அமீர் தனது whatsapp பக்கத்தில் வீசிக்கவும் கம்யூனிஸ்டுகளும் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் ஆட்சி அமைவது என்பது காலத்தின் கட்டாயம் என்று பதிவிட்டுள்ளார். விஜய் அரசியல் நடவடிக்கைகளை முன்னதாக அமீர் கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


