நடிகராக இருந்து விஜய் தற்போது அரசியல் கட்சி தலைவர் என்ற இடத்திற்கு நகர்ந்துவிட்டார். கட்சி ஆரம்பித்து திமுகவினரை எதிர்த்து அவர் சட்டசபை தேர்தலில் தனித்தும் களமிறங்கி இருந்தார். இதற்கிடையே, அவர்களிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என சங்கீதா தாக்கல் செய்த மனு ஜூன் 15ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.

எக்கேடு கெட்டு வாழலாமா?.. அதெல்லாம் நீங்க சொல்லாதீங்க.. சத்யராஜை வச்சு செஞ்ச பேரரசு..!
அன்றைய தினம் கண்டிப்பாக அவர்களுக்கு சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்து விடும் என பலரால் கருதப்படுகிறது. அரசியல் கட்சியை தொடங்கி ஒரு தேர்தலையும் சந்தித்து விட்ட விஜய். களத்துக்கு வந்ததிலிருந்து அவரை சுற்றி ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தது. கரூர் துயர சம்பத்தில் அவரது இமேஜ் கொஞ்சம் கீழ் விழுந்தது. அடுத்ததாக, ஒட்டுமொத்த அவரது இமேஜ் டேமேஜ் ஆனது என்றால், சங்கீதா விஷயத்தில் தான். விஜயின் மனைவி தாக்கல் செய்திருந்த மனுவில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

முன்னதாக, விஜயின் தாய் சோபா தந்தை எஸ்ஏ சந்திரசேகரை பொறுத்தவரை தங்களது மகனுக்கு முழு ஆதரவையும் கொடுத்து வருகிறார்கள். இவர் சங்கீதா பக்கம் இருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். ஆனால், அவரோ தேர்தலுக்கு முன்னர் கொடுத்த பேட்டியில் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக விளக்கி விட்டார்.

மேலும், விஜயின் விஜய் பாணியில் திமுக மீதும் இந்த விஷயத்தில் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட விஜயின் தாய் சோபா விஜய் பிறந்ததிலிருந்து நல்லநேரம் தான். இவ்வளவு பீக்கிற்கு அவர் வருவார் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. எல்லாம் கடவுள் அருள் தான். எப்போதுமே, விஜய்க்கு நான் வாழ்த்து சொல்வேன். இப்போது, ஸ்பெஷலான இடத்தில் அவர் இருக்கிறார். அதற்கும் சேர்த்து ஸ்பெஷலான வாழ்த்துக்கள் என்று பேசி இருந்தார்.

