பொதுவாக மளிகை பூ என்றால் தலையில் வைப்பது அல்லது சாமிக்கு வைப்பது இதைத்தான் நாம் செய்து வந்திருப்போம். மல்லிகை பூவை வைத்து உங்கள் அழகை மேம்படுத்தலாம் என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? அது குறித்து இந்த பதிவில் காண்போம்.
சரும பராமரிப்புக்கு டோனர்

பொதுவாக மல்லிகை பூ அதன் நறுமணத்திற்காக மட்டுமல்லாமல் சரும பராமரிப்புக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. சருமத்தை புதுப்பிக்க மல்லிகை பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை ஆறவிட்டு முகத்தில் தெளித்து வரலாம். இது ஒரு டோனர் போல செயல்படும். இது சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்து பொலிவை மீட்டெடுக்க உங்களுக்கு உதவி புரிகிறது.
பாடி லோஷன்

சிறிது மல்லிகை பூக்களை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து சில நாட்கள் வெயிலில் வைக்கவும். இந்த நறுமண எண்ணெய் குளிப்பதற்கு முன் உடலில் தேய்த்து வந்தால், உங்கள் சருமம் மென்மையாகவும் நறுமணத்துடனும் இருக்கும்.
தழும்புகள் நீங்க

கெமிக்கல் வேண்டாம்.. முகம் ஜொலிக்க சில மேஜிக்..!
மல்லிகை பூவின் இதழ்களை எடுத்து மைபோல நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவவும். 15 லிருந்து 20 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவினால், நாளடைவில் முகப்பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைவதை கண்கூடாக காணலாம்.
கருவளையங்களுக்கு மல்லிகைப்பூ

பசும்பாலில் மளிகை பூவை ஊறவைத்து அரைத்து கண்களை சுற்றி பற்று போல் போட்டு வர இது கண்களுக்கு குளிர்ச்சி தன்மையை தருவதோடு, கண்களை சுற்றி உள்ள கருமையை நீக்கவும் உங்களுக்கு உதவி புரிகிறது. ஆரோக்கியமான கூந்தலுக்கு தண்ணீரில் ஊற வைத்த மல்லிகை பூக்களை அந்த தண்ணீரைக் கொண்டு தலைமுடியை அலாசவும். இது தலையில் உள்ள பொடுகை குறைப்பதோடு மல்லிகை பூவின் வாசனை கூந்தலுக்கு இயற்கையான நறுமணத்தையும் மென்மையையும் தருகிறது.
மன அழுத்தத்தை குறைக்கும் மல்லிகை பூ

மல்லிகை பூவின் சாற்றை கொண்டு உங்கள் முகத்தில் மசாஜ் செய்துவர நரம்புகளை தளர்த்தி மன அழுத்தத்தை குறைக்கிறது. மன நிம்மதி அடைந்தாலே அதன் பிரதிபலிப்பு முகத்தில் அழகாக தெரியக்கூடும்.
வயதான தோற்றத்தை தடுக்கும் மல்லிகைப்பூ

தயிர் உடன் மல்லிகைப்பூ இதழ்களை சேர்த்து அரைத்து முகத்தில் ஒரு பேக் போல போடவும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து இளமையான தோற்றத்தை தக்க வைக்கிறது.
சரும பரிசோதனை

எந்த ஒரு குறிப்பையும் முயற்சிக்கும் முன் உங்கள் சருமத்தில் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்து அலர்ஜி ஏதும் ஏற்படுகிறதா என்பதை பார்த்து அதன் பின் பயன்படுத்துவது சிறந்தது. பூக்களை பயன்படுத்துவதற்கு முன் அவற்றை நன்றாக கழுவி சுத்தம் செய்து பயன்படுத்தவும். மல்லிகை பூவின் மனம் மனதிற்கு எவ்வளவு இதமோ அதே அளவு அதன் மருத்துவ குணங்களும், உங்கள் அழகை கூட்ட உதவி புரியும். மேற்கூறிய குறிப்புகளைப் பின்பற்றி, மல்லிகைப் பூவின் மருத்துவ மற்றும் அழகு குணங்களைப் பெறலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

