திமுக வேட்பாளர் ஓ.ஜோதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளார். அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த காமெடி நடிகை ஆர்த்தி கணேஷ் நேற்று கட்சி ஆரம்பித்துவிட்டு இன்று முதலமைச்சர் ஆக வேண்டும் என ஒருவர் ஆசைப்படுகிறார். அவர் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மீண்டும் தள்ளிப்போகிறதா தொகுதி மறுவரையறை?.. வெடி வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்..!
அவருடன் நான் மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளேன் என்பதால், உங்களை விட எனக்கு அவரை நன்றாகவே தெரியும். அவரைப்போல நடனம் ஆட யாராலும் முடியாது. ஆனால், சட்டமன்றத்தில் நடனம் ஆட முடியுமா? அப்படி நடனம் ஆடினால், நம்ம நிலைமை என்னவாகும்.

சினிமா சூட்டிங் காலை 7:00 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணிக்குள் முடிவடையும். ஆனால், அரசியல் அப்படி அல்ல. முழு நேர பொறுப்பும் தொடர்ச்சியான செயல்பாடும் இருக்க வேண்டும். மூன்று மணிக்கு வந்துவிட்டு ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு செல்வது அரசியல் அல்ல. ஷூட்டிங் என நினைத்துக் கொண்டு மாலை 6 மணிக்கு மேல் அவர் வெளியே வருவதில்லை.

ஒரு படத்தில் கவுண்டமணிக்கு 6 மணிக்கு மேல் கண் தெரியாது. அது மாலை கண் நோயாக இருக்கும். அதுபோல இவருக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கா என்று தெரியவில்லை. யாரிடமும் பேச மாட்டார். ஆனால், முகத்தைப் பார்த்து மட்டும் ஓட்டு போடுங்கள் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என ஆர்த்தி கணேஷ் பேசியதற்கு தற்போது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

