சம்மர் சீசன் ஆரம்பித்து விட்டது. வெளியே சென்றாலே சருமம் பொசிந்து போகும் அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இப்படி கோடை வெயிலில் உடலை நீரோட்டத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதேபோல், சருமமும் கூடுதல் நீரோட்டத்துடன் இருக்க வேண்டும். நேரடியாக வெயில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இது தவிர சருமத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சன் ஸ்கிரீமை பயன்படுத்துவது சிறந்தது. அது மட்டுமின்றி சருமத்தை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியிடம் வைத்துக் கொள்ளும் படியான ஃபேஸ்களை பயன்படுத்தலாம். அதுவும் நம் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து இந்த ஃபேஸ் பேக்கை நாம் தயாரிக்கலாம்.

ஆலோவேரா ஜெல் சிறிது வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15லிருந்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறருக்கு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பப்பாளி எடுத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு எடுத்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15லிருந்து 20 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம்.

ஒரு பௌலில் இரண்டு டீஸ்பூன் தயிர் எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15லிருந்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு, வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதன் மூலம் சருமம் பளிச்சென்று பிரகாசமாகவும் நீரோட்டத்துடன் இருக்கும்.
முகம் பிசுபிசுப்பாக இருக்கா?.. வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய 5 இயற்கை ஃபேஸ் வாஷ்கள்..!
இப்படி இந்த ஃபேஸ் பேக்கை போடுவதால் சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் நீங்கி முகப்பரு வராது தடுக்கப்படுகிறது. மற்றும் சருமத்தின் அமைப்பும் சீராக இருக்கும். சருமம் ஆரோக்கியமாகவும். சருமம் பளிச்சென்று பிரகாசமாகவும் இருக்கும். சம்மரில் சருமத்தில் ஏற்படும் சேதத்தை தடுக்க இதனை பயன்படுத்தலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

