தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23ஆம் தேதி நடக்க உள்ளது. திமுக பல கட்சிகளுடனும் அதிமுக சில கட்சிகளுடன் தவெக தனித்தும் இந்த தேர்தலை சந்திக்க இருக்கின்றனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத சப்ரைசாக இயக்குனர் சுந்தர் சி யும் இந்த தேர்தல் களத்தில் களமிறங்க இருக்கிறார்.
சர்ப்ரைஸாக இயக்குனரும், நடிகரும் குஷ்புவின் கணவருமான சுந்தர்சி மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கவிருக்கிறார். இந்த தொகுதி அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட உள்ளது. எனவே, இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடவிருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தனது மனைவி போல் இவரும் அரசியலில் ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. தீயாய் பரவும் ஹன்சிகாவின் பிளாக் அவுட்ஃபிட்..!
முன்னதாக, மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் சுந்தர் சி தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில், சுந்தர் சி பெயரில் 2.97 கோடி மதிப்பில் சொத்துக்களும் குஷ்பு பெயரில் 6 புள்ளி 06 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும் உள்ளன.

சுந்தர் சி யிடம் ரூபாய் 50 ஆயிரத்து 600 கையிருப்பும், குஷ்புவிடம் ரூபாய் 30,000 கையிருப்பும் உள்ளதாம். சுந்தர்சியிடம் மனை நிலங்களாக மூன்று இடங்களும் குஷ்பூவுடன் மனை நிலங்களாக ஆறு இடங்களும் உள்ளன. சுந்தர் சியிடம் அசையா சொத்துக்கள் மதிப்பு 20 புள்ளி 80 கோடியும். குஷ்புவிடம் அசையா சொத்துக்களின் மதிப்பு 16.79 கோடியும் உள்ளனவாம்.

