Close Menu
    What's Hot

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»இளம் பெண்ணை எரித்த வழக்கு.. போலீசிடம் இருந்து தப்ப முயன்று மாவு கட்டு வாங்கிய இளைஞர்..!
    கோவை

    இளம் பெண்ணை எரித்த வழக்கு.. போலீசிடம் இருந்து தப்ப முயன்று மாவு கட்டு வாங்கிய இளைஞர்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 21, 2026Updated:February 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    CBE UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் கல்லூரி அருகே இளம்பெண் கொன்று எரித்த சம்பவம் தொடர்பாக, இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கோவையில் இளம் பெண்ணை அடித்துக் கொலை செய்து எரித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள வட்டமலைபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி பின் புறம் உள்ள புதரில் இளம்பெண்ணின் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தெரியவந்தது.

    இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் பாண்டி கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த துடியலூர் காவல் ஆய்வாளர் தவசியப்பன் தலைமையிலான போலீஸார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

    இதில், உயிரிழந்த பெண் செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த அனிதா (25) என்பதும், இவர் அங்கு காய்கறிகடை நடத்தி வருவதும் ஏற்கெனவே திருமணமான இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆன தமிழ்செல்வன் (30) என்பவருடன் பழக்கம் இருந்து வந்ததும் தெரியவந்தது.

    சம்பவத்தன்று தனியாகப் பேச வேண்டும் எனக் கூறி, அனிதாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வட்டமலைபாளையம் பகுதிக்கு தமிழ்செல்வன் வந்து உள்ளார். அப்போது, அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    CBE UTv

    இதில், ஆத்திரம் அடைந்த தமிழ்செல்வன் அங்கு இருந்த கட்டையால் அனிதாவின் தலையில் தாக்கி உள்ளார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதை அடுத்து, கொலையை மறைக்கவும், பெண்ணின் அடையாளத்தை மாற்றவும் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து சடலத்தில் ஊற்றி தீவைத்து விட்டு தமிழ்செல்வன் அங்கு இருந்து தப்பி உள்ளார்.

    இதை அடுத்து, அனிதாவின் செல்போன் எண்ணை வைத்து துப்பு துலக்கியதில் தமிழ்செல்வன் பிடிபட்டார். இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநனராக பணியாற்றி வருகிறார். அவரிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் தமிழரசனை பிடிக்க முயற்சி செய்தபோது தப்பி ஓடியதாகவும் அப்போது கீழே விழுந்ததில் அவரின் வலது காலில் எலும்பு முறி ஏற்பட்டதாகவும், போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்து மாவு கட்டு போட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    Coimbatore Murder Case Crime news Tamil Thudiyalur Police Youth Arrested Murder இளம்பெண் எரித்த வழக்கு கோவை கொலை சம்பவம் வட்டமலைபாளையம் சம்பவம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    வாகனங்கள் மீது பாய்ந்த லாரி.. பிரேக் பழுதானதால் இருவருக்கு நேர்ந்த சோகம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    பிரபல பாடகி கெனிஷாவுக்கு நீதிமன்றம் செக்.. புதிய வழக்கில் சிக்கிய விவகாரம்..!

    June 6, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026
    Don't Miss

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    கோவை பெரியநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் 50 ஆயிரம் மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையைத் திருடி பையில் திணித்து ஓட முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.