கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கும் உட்பட்ட அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் கடந்த 07.12.25. அன்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோசப் அலி சஜிதா பேகம் இவருடைய மகன் சைபுல் அலாம் வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த போது அப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை தூக்கிச் சென்று தாக்கியதால் உயரிழந்தான்.
இந்த நிலையில் தற்போது அப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக அப்பகுதியை சிறுத்தை அடிக்கடி உலா வருவது சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது.

இதனை வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து முன்னோட்டம் பார்க்கப்பட்டது.
மேலும் வால்பாறை பகுதியில் சிறுத்தை கரடிகளால் உயிர் சேதம் அதிகரித்து வரும் நிலையில் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தற்போது கூண்டு வைத்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் யாரும் வெளியே வர முடியாத நிலையிலும் பள்ளிக் குழந்தைகளை மிகவும் கவனத்துடன் கூட்டிக்கொண்டு வரவேண்டிய ஒரு அவல நிலை உள்ளது. அதனால் விரைவில் அப்பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

