பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார் பிரபாஸ். இவர் பாகுபலி படம் நடித்ததன் மூலம் இந்தியாவில் பிரபலமான ஹீரோவாக மாறினார். தொடர்ந்து பான் இந்தியா படங்களாக நடித்து வருவதால் பல கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.
தற்போது ராஜா சாப் என்ற படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் நடித்து வரும் நிலையில் கயல் ஆனந்தி இணைந்துள்ளார்.
குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த கயல் ஆனந்தி, தெலுங்கு தேசத்தை பூர்விகமாக கொண்டவர். சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஆனந்தி, தற்போது பிரபாஸ் உடன் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

பிரபாஸ் படத்தில் 3வது நடிகையாக ஆனந்தி இணைந்துள்ளதால், ஒரு பாடலுக்கு நடனமாடுகிறாரா அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாரா என்ற தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

