டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.டெல்லியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவும் வகையில், ஆண்டுதோறும் ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது தலா ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்.. புதிய உச்சத்தைத் தொடும் விலை உயர்வு..!
இத்திட்டத்தின் கீழ் சிலிண்டருக்கான தொகை பயனாளர்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் (Direct Benefit Transfer). ரேஷன் கார்டு வைத்துள்ள தகுதியான குடும்பங்கள் இதன் மூலம் பயனடைவர். இதேபோல், உத்திரப் பிரதேசத்தில் உஜ்வாலா யோஜனா (Ujjwala Yojana) திட்ட பயனாளிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் அம்மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

