குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடத் தடுப்பவர்களுக்குத் தண்டனை வழங்கும் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததுள்ளது. தேசிய கீதமான ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுவதைத் தடுப்பவர்கள் அல்லது அதற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வகை செய்யும் புதிய மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
நாட்டின் தேசபக்தி உணர்வையும், தேசிய அடையாளத்தையும் காக்கும் நோக்கில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், பொது இடங்களில் அல்லது அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் இந்தப் பாடலைப் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சட்டப்படி தண்டனைக்கு உள்ளாவார்கள்.
தவறான உணவு முறை விந்தணுக்களைப் பாதிக்குமா?.. ஆரோக்கியத்திற்கான எளிய வழிமுறைகள்..!
இந்தப் புதிய சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேசப் பற்றை அவமதிக்கும் செயல்களைக் கட்டுப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

