செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரபலங்களின் முகங்களை மார்பிங் செய்து வெளியிட்டு வரும் விவகாரத்தில், தற்போது நடிகை மிருணாள் தாகூரும் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
தனது முகத்தையோ அல்லது உருவத்தையோ பயன்படுத்தி டீப்ஃபேக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதும், பகிர்வதும் முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக அதனை நிறுத்த வேண்டும் என்றும், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பல நடிகைகள் டீப்ஃபேக் விவகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

