ஒரு பொது நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன், திரிஷா குறித்துப் பேசிய கருத்துக்கள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திரிஷா சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்க, அது பெரிய விவாதமாக மாறியது.
தற்போது இதுகுறித்து அளித்த பேட்டியில் பார்த்திபன், தான் எதையும் நகைச்சுவையாகவும் நேர்மையாகவும் பேச நினைத்ததாகவும், ஆனால் அது இவ்வளவு பெரிய சர்ச்சையாகும் என்று தான் சத்தியமாக நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஜனநாயகன் தியேட்டரா அல்லது ஓடிடியா?.. நீண்ட இழுபறிக்கு பின் சென்சார் கிளியர்..!
பெண்கள் குறித்து தான் பேசிய விதம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்றும், தான் சொல்ல வந்த கருத்து வேறு, அது சென்றடைந்த விதம் வேறு என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பேச்சு குறித்து தான் மறுநாளே வருத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

